அயோத்தி, ஜன. 20 - ஜனவரி 22 அன்றுதான் பிரதமர் மோடி, ராமர் சிலையை பிரதிஷ்டை செய்ய உள்ளார். ஆனால், அதற்கு முன்ன தாகவே சிலை வடிவம் வெளியானதற்கு அயோத்தி ராமர் கோவில் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
ராமர் சிலை புகைப்படம் வெளியான தற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அவர், இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். அயோத்தி ராமர் கோவில் மூலவர் சிலைக்கு மைசூரு சிற்பி அருண் யோகி ராஜ் வடிவமைத்த குழந்தை ராமர் சிலை தேர்வு செய்யப்பட்டது. இவரின் கைவண் ணத்தில் கருங்கல்லில் 51 அங்குலத்தில் செதுக்கப்பட்டு 5 வயது பாலகனாக கட வுள் ராமர் சிலை வடிவமைக்கப்பட்டு, கோயிலில் நிறுவப்பட்டது. இந்நிலையில் அந்தச் சிலை எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மிகவும் அதி கரித்தது. எனினும், பிரதிஷ்டைக்குப் பின் னரே சிலையின் அம்சத்தை அறியமுடி யும் என்று பக்தர்கள் இருந்தனர்.
ஆனால், சிலையின் முழு உருவம் குறித்த புகைப் படங்கள் சர்வசாதாரணமாக இணைய தளம் மற்றும் செய்தி தொலைக்காட்சி களில் வெளியாகி வைரலானது, பலரை யும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. குறிப்பாக, ராமர் கோவில் தலைமை அர்ச்சகர் ஆச் சார்யா சத்யேந்திர தாஸூம், இந்த புகைப் படங்களால் அதிர்ச்சிக்கு உள்ளாகியி ருக்கிறார். “புதிய சிலை இருக்கும் இடத்தில், பிரான பிரதிஷ்டையின் சடங்குகள் செய் யப்படுகின்றன. சிலையின் உடல் தற் போது துணிகளால் மூடப்பட்டுள்ளது.
திறந்த கண்களுடன் சிலை வெளிப்படுத் தப்பட்டது சரியானது அல்ல. பிரான பிர திஷ்டைக்கு முன் கண்கள் திறக்கப் படக்கூடாது. அத்தகைய படம் வெளி யிடப்பட்டிருந்தால் அதை யார் செய்தார் கள் என்பது குறித்து தீவிரமாக விசா ரணை நடத்தப்பட வேண்டும்” என்று கொந்தளித்துள்ளார். ராமர் கோவில் திறப்பின் அனைத்து நிகழ்வுகளும், துவக்கம் முதலே தொடர் சர்ச்சைக்கு உள்ளாகி வருவது குறிப்பி டத்தக்கது.